தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே இந்த புகார் குறித்து முதல்வர் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து ரேஷன் கடைகளில் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவு:
தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் 2022ம் ஆண்டுக்கான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் முதல்வர் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருள்களும், கரும்பும் சேர்த்து தனித்தனி துணி பைகளில் பேக்கிங் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த வகையில் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மக்களின் நலன் கருதி அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி உள்ள சூழலிலும் 1,297 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் தினமும் 200 ரேஷன் கார்டுகள் வீதம் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
இந்த வகையில் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதை முதல்வரை நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்தைப் பற்றி சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த சந்தேகங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து ரேஷன் கடைகளில் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.