தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. அதே போல் இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை தொற்றுகள் அதிக அளவில் பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளாக தினசரி இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜன.15, 18 மற்றும் 26ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஜன.15ம் தேதி திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்று டாஸ்மாக் கடை மூட உள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஜன.26ம் தேதி இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள் என்பதால் இந்த 3 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் பார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய உத்தரவு மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.