ஜீ தமிழுக்கு சென்ற ‘பாரதி கண்ணம்மா’ நடிகை அஞ்சலி கண்மணி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி வேடத்தில் நடித்து வரும் கண்மணி மனோகரன் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒரு புதிய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கண்மணி மனோகரன்:
சின்னத்திரை சீரியல் மூலமாக அறிமுகம் ஆகி தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக பலரும் வலம் வருகின்றனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். இந்த வரிசையில் அடுத்தடுத்து பல நடிகைகள் சேர உள்ளது வெளியாகும் வெள்ளித்திரை தகவல்கள் மூலம் உறுதியாகிறது. இதனால் சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளை நடிகைகள் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி வேடத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிப்பவர் கண்மணி மனோகரன்.
இவர் மாடலிங் துறையில் முன்னதாக பணியாற்றி வந்த நிலையில், சின்னத்திரை வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பு துறையில் நுழைந்துள்ளார். முதலில் சீரியலில் ஒரு குட்டி வில்லியாக கண்மணி தான் இருந்து வந்தார். கண்ணம்மாவிற்கு நல்லது எதுவும் நடக்க விடாமல் தடுத்து வந்தது அஞ்சலியும், அவரது அம்மாவும் தான். ஆனால் கதை செல்ல செல்ல அஞ்சலி தனது குணத்தை மாற்றி நல்லபடியாக நடந்து கொள்வது போல் மாறி விட்டது. அதன்பிறகு அகிலன், அஞ்சலி ஜோடிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் புதிதாக நடித்துள்ளார் கண்மணி. அதிலும் பாரதி கண்ணம்மா தொடரில் வந்த அதே அகிலனுடன் சேர்ந்து நடித்திருப்பதால் அதிக ரீச் கிடைத்துள்ளது. தற்போது கண்மணி ஜீ தமிழ் சேனலில் புதிதாக தொடங்க உள்ள சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா மற்றும் நகுல் ஆகியோர் நடுவராக கலந்து கொள்கின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.