‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!

0
'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!
'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!
‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது இறுதி போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்ட 5 பேரில் முக்கிய பிரபலம் ஒருவர் தான் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போகிறார் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

‘பிக் பாஸ்’ பைனல்

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 100வது நாளுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு சந்தோஷங்கள், கண்ணீர், போட்டிகள், அடிதடிகள் என கடந்து வந்த இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை எபிசோடுடன் முடிவடைய இருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்களுடன் கலம் கண்ட இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது ராஜு, நிரூப், பிரியங்கா, அமீர் மற்றும் பாவனி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் அமீர் மட்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 2 GB டேட்டா! சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் முழு விபரம்!

இப்போது இறுதி போட்டியில் இடம்பெற்றுள்ள இவர்கள் ஐவரில் ஒருவர் தான் அந்த ‘பிக் பாஸ்’ டைட்டிலை ஜெயிக்க வாய்ப்புள்ளது. அந்த நபருக்கு ‘பிக் பாஸ்’ டிராபியுடன் சுமார் 50 லட்சம் பணம் கிடைக்க இருக்கிறது. இப்போது நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் ‘பிக் பாஸ்’ நடத்திய பினாலே போட்டிகளின் மூலம் இறுதி கட்டத்திற்கு தகுதி ஆகி உள்ளனர். மற்றபடி ராஜு, ப்ரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் மக்களின் வாக்குகளுடன் இந்த இறுதி மேடையை அலங்கரிக்க உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!

இதில் போட்டி துவங்கிய முதல் வாரத்தில் இருந்து இன்று வரையிலும் மக்களின் ஆதரவை பெற்று வரும் போட்டியாளர் ராஜு ‘பிக் பாஸ்’ டைட்டிலை ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வாரமும் அதிகளவு வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ராஜு தான் ‘பிக் பாஸ்’ டைட்டிலை பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இவரை அடுத்து பிரியங்காவும் ‘பிக் பாஸ்’ டைட்டிலை ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் இறுதி போட்டியில் என்ன நடக்கிறது என்பதை வரும் ஜனவரி 16ம் தேதி வரை காத்திருந்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!