மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!

இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, டெல்லி, மணிப்பூர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது.

கூடலூரில் ஜன.11ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மத்திய அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருவதால் மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் இவர்கள் அலுவலகம் வருவதற்கு ஜனவரி 31-ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – ஜன.19 கடைசி நாள்!

இதில் குறிப்பாக துணை செயலாளர்கள் பதவிற்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50% பேருக்கும் மட்டும் அலுவலகம் வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50% வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும். இதனை சுழற்சி முறையில் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் மற்ற ஊழியர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களில் காணொளி நிகழ்ச்சியில் கட்டாயமாக பங்கு பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!