பெண் குழந்தைக்கு தாயான ஜீ தமிழ் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சசிகலா நாகராஜன். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சசிகலா நாகராஜன்:
சமீபத்தில் தமிழ் சின்னத்திரை நடிகைகளுக்கு குழந்தை பிறந்துள்ள செய்தி வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா பரீனாவிற்கு ஆண் குழந்தை, அரண்மனை கிளி ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை, நடிகை நீலிமாவிற்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி முன்னணி தொகுப்பாளராக இடம் பிடித்தவர் சசிகலா நாகராஜன்.
ஜீ தமிழுக்கு சென்ற ‘பாரதி கண்ணம்மா’ நடிகை அஞ்சலி கண்மணி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
தொகுப்பாளராக மக்கள் மனதில் அவர் இடம் பிடித்து அதன் பின் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. அவர் குலதெய்வம் சீரியலில் அறிமுகமாகி பின், என்றென்றும் புன்னகை சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடம் பிரபலமானவர். அவர் பிரபாகரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தார்.
அவரது வளைகாப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பலர் சீரியல் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சசிகலாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் “yes it’s a girl baby” என்று புகைப்படத்துடன் அவர் பதிவிட்டு இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.