தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான பை – புத்தாண்டாக தை 1ம் தேதி மாற்றம்?
தமிழகத்தில் இதுவரை சித்திரை 1ம் தேதி அன்று தான் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது அதில் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டு:
தமிழர்கள் ஆதி காலம் முதல் சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தை முதல் நாளை தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதுவே பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் நாட்கள் ஆகும். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது, தமிழர்களின் திருநாளாக உள்ள தை முதல் நாள் தான் தமிழர்களின் புத்தாண்டாக கொண்டாடிட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தமிழ் புத்தாண்டு சட்டத்தை அமல்படுத்தினார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்கள் அச்சம்!
கலைஞரின் இந்த அறிவிப்பால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பிறகு, கடந்த 2011ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு, கலைஞர் கொண்டு வந்த புத்தாண்டு சட்டத்தை நீக்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை சட்டம்) சட்ட மசோதாவை தாக்கல் செய்து மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. இதனால் தற்போது வரை சித்திரை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு தினமாக சிறப்பிக்கப்படுகிறது. தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு அளிக்க உள்ளார்.
Wipro நிறுவனத்தில் 25,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – Freshers க்கு சூப்பர் அறிவிப்பு!
அதில் பொங்கல் சமைக்க தேவையான பொருட்களோடு அத்தியாவசிய சமையல் பொருட்கள் 20 அடங்கிய பையும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார். அரசு வழங்க உள்ள இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பையில் ‘இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வர் மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழ் புத்தாண்டு குறித்த குழப்பம் மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரபூர்வமாக இது குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.