Wipro நிறுவனத்தில் 25,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – Freshers க்கு சூப்பர் அறிவிப்பு!
கொரோனா கால ஊரடங்கு காரணமாக அதிக அளவிலான பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை மேம்பட்டு வருவதால் நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Wipro நிறுவன வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் மோசமான பாதிப்பை சந்தித்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் நியமனத்தை நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருந்தது. இந்நிலையில் சமீப காலத்தில் தான் கொரோனா தொற்று பாதிப்பு நிலைமைகள் சீரடைந்து நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகின்றது. தங்களது நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் பொருட்டு பல நிறுவனங்கள் அதிக ஊழியர்களை புதிதாக பணியமர்த்தி வருகிறது.
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!
பல மென்பொருள் நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய ஐடி நிறுவனமான விப்ரோ, அடுத்த ஆண்டு அதிக அளவில் புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்க உள்ள 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விப்ரோ தலைவர் சௌரப் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, திறமையான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதில் விப்ரோ உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நாங்கள் துரிதப்படுத்துகிறோம்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
விப்ரோவில் தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 17,000 நபர்களை நிறுவனத்தில் பணியமர்த்தி உள்ளோம். விப்ரோ புதிய தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதேபோல் புதிதாக சேருபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒரு புதிய திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக டிசிஎஸ் 77,000, இன்ஃபோசிஸ் 45,000 மற்றும் HCL 22,000 பணியமர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், விப்ரோவும் தனது அடுத்த ஆண்டிற்கான இலக்கினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.