தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அது வரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் கூறுகிறார்.

மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் மாணவ, மாணவியர்கள் தங்களது பாடங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கற்று வந்தனர். அதன் பின் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் நோய் பரவல் கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் முழுவதும் குடும்ப பென்ஷன்! அரசாணை வெளியீடு!

ஆனால் தற்போது பருவ மழைக்காலம் என்பதால் கனமழை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் அநேக இடங்களில் வெள்ளப்பெருக்கு எற்பட்டது. அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக மழை பெய்யும் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்கள் தங்களது பாடங்களை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளன.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஓமைக்ரான் எதிரொலி! ஏற்றுமதியாளர்கள் கலக்கம்!

இதனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பித்து வருகின்றனர். அத்துடன் நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக தகவல்களை தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். அதன் பின்னர் தான் பொதுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!