மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்கள் அச்சம்!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கடலோர மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடையில் சற்று ஓய்ந்த மழை தற்போது தெற்கு வங்ககடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களும் நிரம்பி மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது.
Wipro நிறுவனத்தில் 25,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – Freshers க்கு சூப்பர் அறிவிப்பு!
ஏற்கனவே வானிலை அறிக்கை தகவலின் படி நவம்பர் 30ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை சற்று மழை தணிந்து வந்த நிலையில் திடீரென மாலையில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.