பொங்கல் பரிசு தொகுப்பு 2023: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுக்கு ரொக்கப்பரிசுடன், பச்சரிசி, சர்க்கரை,நெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த பரிசு பொருட்கள் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி, ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்க உள்ளதாகவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட கூடிய பொருட்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும் என வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.
இந்தியாவில் நவம்பர் மாத GST வருவாய் உயர்வு – ரூ.1,45,867 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் விளையும் பொருட்களை கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் தமிழக விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.