இந்தியாவில் நவம்பர் மாத GST வருவாய் உயர்வு – ரூ.1,45,867 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் கடந்த வருடத்தை விட GST வரி விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது 11% உயர்வு எனவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
GST:
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகளுக்காக GST வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அனைத்து மாநிங்களுக்கும் தனித்தனியாக விதிக்கப்பட்டு வந்த மறைமுக வரி தான் தற்போது ஒன்றிணைக்கப்பட்டு மத்திய அரசால் ஜிஎஸ்டி எனும் பெயரில் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டுக்கான ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு உணவு பொருட்கள் உட்பட பல வீட்டு உபயோக பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. இதனால் பொருட்களின் விற்பனை விலையும் சரமாரியாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
2023ல் ஊழியர் பணிநியமனத்தை அதிகரிக்க திட்டம் – Kovai.Co நிறுவனத்தின் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதற்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வரி விகிதம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 11% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.