புதுச்சேரியில் நாளை (பிப்.24) மாசிமகம் தீர்த்தவாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் விழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாமல், தமிழகத்தை சேர்ந்த ஏராளமான கோவில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்கள். ஒரே இடத்தில் அனைத்து சாமிகளும் வருவதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள்.
அந்த வகையின் இந்த ஆண்டு மாசிமக பெருவிழா நாளை (பிப்.24) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் புதுச்சேரி முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மேல்நிலை பள்ளிகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அது வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.