மத்திய அரசின் PM கிசான் திட்ட பயனர்கள் கவனத்திற்கு – புதிய வழிமுறைகள் வெளியீடு!
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 10வது தவணை வரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 11வது தவணை பெற இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் தங்களின் இகேஒய்சி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
பிஎம் கிசான் திட்டம்
இந்தியாவில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இத்திட்டத்தில் 10 தவணைகள் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை ஆணையர் தகவல்!
இந்த திட்டத்தில் 11 தவணை பெற விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் 11வது தவணை வழங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 11வது தவணையை பெற இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் தங்களின் இகேஒய்சி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Exams Daily Mobile App Download
அத்துடன் சரிபார்க்காதவர்களுக்கு 11வது தவணை செலுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தங்களின் இ-கேஒய்சி விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக திருத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இகேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான வழிமுறைகள்
1. இதற்கு முதலாவதாக https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று இதில் இ-கேஒய்சி இன் இணைப்பு வலது பக்கத்தில் இருக்கும்.
2. இப்போது புதிய பக்கம் ஒன்று திரையில் காண்பிக்கப்படும். இதில் பயனாளிகள் தங்களின் ஆதார் எண், கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
3. இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
4. இப்போது 4 இலக்க OTP எண்ணை உள்ளிட வேண்டும்.
5. மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானை கிளிக் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இப்போது மீண்டும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மற்றொரு 6 இலக்க OTP எண் அனுப்பப்படும்.
6. இந்த OTP எண்ணையும் உள்ளிட வேண்டும். இப்போது இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்படும் அல்லது தவறானது என்று திரையில் காண்பிக்கப்படும்.
7. இதில் தவறானது என்றிருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று சரி செய்ய வேண்டும்.