PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

0
PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு - ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!
PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு - ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!
PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் கிசான் திட்டத்தில், பணம் பெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயிகளுக்கு, வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அவகாசம் நீட்டிப்பு:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் இந்த திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை இந்த திட்டத்தில் 10 தவணைகள் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன. 11 வது தவணை மே 31 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வந்து சேரும், இதை பிரதமர் மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு ஷாக் – லட்டு தட்டுப்பாடு! தேவஸ்தானம் முக்கிய முடிவு!

மேலும் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 98,000 விவசாயிகள், PM கிசான் திட்டத்தில் வருடம் தோறும் வழங்கப்படும் சிறப்பூதியம் பெறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இதில், ஒரு சிலருக்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது. இதை தவிர்க்க, வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு, மே 31ம் தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த செயல்முறையை பலர், சர்வர் மற்றும் பல்வேறு இடையூறு காரணமாக குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க முடியவில்லை என கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் நலன் கருதி, ஜூலை மாதம் 31ம் தேதிக்குள், விவசாயிகளின் வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!