திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு ஷாக் – லட்டு தட்டுப்பாடு! தேவஸ்தானம் முக்கிய முடிவு!
ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வார இறுதி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதனால் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி கோவில்:
ஆந்திராவில் உள்ள பிரசத்திப்பெற்ற வழிபாட்டு தளமான திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்வர். தற்போது கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்தது அடுத்தும், பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.
திருப்பூரில் நாளை (ஜூன் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சுவாமியை தரிசனம் செய்ய 48 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். சென்ற வார வெள்ளிக் கிழமை அன்று சுமார் 89,318 பேர் தரிசனம் செய்தனர். அதில் 48,639 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டது. அதன் பின் சனிக்கிழமை 90,885 பேர் தரிசனம் செய்தனர். அதில் 35,707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர், மேலும் உண்டியலில் ரூ.4.18 கோடி காணிக்கை வசூலானது.
அதே போல ஞாயிற்று கிழமை அன்று 74,823 பேர் தரிசனம் செய்தனர். 31,159 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.51 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த வாரம் 3 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டது. வழக்கமாக பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் சார்பில் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படும். கடந்த 3 நாட்களில் மட்டும் சராசரியாக 7 முதல் 8 லட்சம் வரை தினந்தோறும் லட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் தேவஸ்தானம் சார்பில் முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ 50 க்கு ஒரு லட்டும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு உள்ளதால் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி திருப்பதியில் 71,914 பேர் தரிசனம் செய்துள்ளனர்.