மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 16வது தவணை எப்போது கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வெளியான அறிவிப்பு
இந்திய விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக ரூ. 6000 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 16 வது தவணை தொகையான ரூ. 2000 எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இலவச ரேஷன் திட்டம் ‘சட்டவிரோதம்’ – அதிர்ச்சியில் அரசு!
இந்நிலையில் 16வது தவணை வரவு வைக்கப்படும் நாள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது 16வது தவணை இந்த மாதம் (பிப்ரவரி ) 28 ஆம் தேதி பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து PM Kisan இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.