பஞ்சாபில் 1.41 கோடி பயனாளிகளைக் கொண்ட மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட கோதுமையை மாநில அரசு மாவாக மாற்றி அதை விநியோகிக்க முடியாது என்று பஞ்சாப் டிப்போ வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.
இலவச ரேஷன் திட்டம் ‘சட்டவிரோதம்’:
சமீபத்தில் பஞ்சாப் அரசால் தொடங்கப்பட்ட “கர் கர் மஃப்ட் ரேஷன்” திட்டத்தை “சட்டவிரோதம்” என்று கூறி, டிப்போ வைத்திருப்பவர்கள் பஞ்சாப் கவர்னர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து, இந்தத் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தில் எதிர்மறையான தாக்கம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
BEML நிறுவனத்தில் Chief General Manager வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
டிப்போ வைத்திருப்பவர்களின் கூற்றுப்படி, 25 லட்சம் பேருக்கு ரேஷன் விநியோகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசின் திட்டம், ரேஷன் டிப்போக்களை நம்பியுள்ள 1.15 கோடி நபர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.