இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையை நிலவி வந்த நிலையில் நேற்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகப் பகுதிகளின் மேல்நிலைவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
BEML நிறுவனத்தில் Chief General Manager வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
இதை தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் இறுதி வரை இந்த வானிலை நிலவரம் தொடரும். மேலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு கடல் பகுதிக்கு செல்வதற்கான எந்தவித எச்சரிக்கைகளும் இல்லை. இதனால் மீன் பிடிக்க தடையின்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.