இந்திய விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் 17 வது தவணை குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
வெளியான தகவல்
இந்திய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 16வது தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயன் பெற விவசாயிகள் KYC மற்றும் NPCI கட்டாயம் செய்திருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பது மற்றும் பதிவுப் படிவத்தில் சரியான தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் 17 வது தவணை குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
TNUSRB SI தேர்வு அறிவிப்பு 2024 – சற்றுமுன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதாவது 17 வது தவணை பணம் KYC செய்யாத விவசாயிகளுக்கு கிடைக்காது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பட்டா பாஸ் பெற்ற விவசாயிகள் தற்போது பலன் பெற முடியாமல் இருக்கின்றனர். அவர்களும் விரைவில் பணம் கிடைக்க இருக்கிறது. தகுதி இருந்தும் பணம் கிடைக்காமல் இருந்தால் PM கிசான் உதவி மையம் 011-24300606 மற்றும் 155261 என்ற உதவி எண்கள் அல்லது 18001155266 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.