நாடு முழுவதும் CAA அமல் – ஒன்றிய அரசு அதிரடி!

0
நாடு முழுவதும் CAA அமல் - ஒன்றிய அரசு அதிரடி!

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுதழில் உள் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் CAA அமல்:

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது . குடியரசு தலைவர் 2019 டிசம்பர் 12 இதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சட்டமானது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச்சிறுபான்மையினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வகை  செய்கிறது. மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்த சீக்கியர்கள், செயின், பாரசீகம், இந்து உள்ளிட்ட மதத்தவருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.

NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய உள் துறை  அமைச்சர் அமித் ஷா  அவர்கள் சமீபத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.தேர்தலுக்காக தான் இந்த அறிவிப்பு வெளிவந்தது என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி  வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!