மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – இதை செய்தால் ரூ.2000!
பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு E-KYC கட்டாயம் என்றும், அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோமெட்ரிக் பதிவை செய்து கொள்ளுமாறு பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
eKYC செயல்முறை விவரங்கள்:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
ஆனால், இத்திட்டத்தில் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11வது தவணைத் தொகையாக ரூ.2,000 விரைவில் கிடைக்க இருக்கிறது. இந்தப் பணத்தை பெறுவதற்கு நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் காத்து கொண்டு உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வேளாண் நிதியுதவித் திட்டத்தில் E-KYC செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.11வது தவணையை எந்த சிக்கலும் இல்லாமல் பெற விரும்பினால், உடனடியாக உங்கள் eKYC ஐ முடிக்கவும். கடந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் eKYC ஐ அரசாங்கம் கட்டாயமாக்கியது. எனவே eKYC விவரங்களை பூர்த்தி செய்யாவிட்டால், 11 வது தவணை வங்கிக் கணக்கில் வராமல் போகலாம்.இருப்பினும் சில காரணங்களால், eKYC நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது, ஆனால் இப்போது அது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது, எனவே விவசாயிகள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்யலாம்.
1.முதலில் PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2.வலதுபுறத்தில் விவசாயிகள் கார்னரில் உள்ள விருப்பத்தில், நீங்கள் eKYC இணைப்பைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்
3.இதற்குப் பிறகு உங்கள் ஆதாரை உள்ளிட்டு தேடல் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4.தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். எல்லாம் சரியாக நடந்தால், eKYC முடிக்கப்படும் அல்லது அது தவறானதாகக் காண்பிக்கப்படும்.
5.தவறாக இருந்தால், நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.