தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்:
தமிழகத்தை தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடும் செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு இந்த விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழக முழுவதும் மொத்தம் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் ? – கல்வித்துறை தகவல்!
மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்ரல் 1ல் தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சுமார் மொத்தம் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மதிப்பின் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் திட்டமிட்டபடி முடிவடைந்த உடன் மே 6ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக கல்வி துறை தெரிவித்துள்ளது.