தமிழக ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து தற்போது அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நடைமேடை கட்டணம்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீவிரமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்க ஊரடங்கால் ரயில்வேத்துறை சரிவை சந்தித்தது. மக்கள் தொற்று அச்சத்தில் ரயில்களில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். இதனால் ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட ரயில்கள் அரசு பணியாளர்கள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு களப் பணியாளர்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா குறைத்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அளித்ததால் மக்கள் மீண்டும் வெளியில் செல்ல தொடங்கினர்.
தமிழகத்தில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு – அரசாணை வெளியீடு!
இந்த நேரத்தில் பணிக்கு செல்பவர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில் நடைபாதை டிக்கெட் விற்பனையையும் தொடங்கியது. ஆனால் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு ரயில் பணிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நவ.27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பழையபடி நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி ஆகிய சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் குறைக்கப்பட்ட நடைமேடை கட்டணம் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.