தமிழகத்தில் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 700 ஆயுள் கைதிகள் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கைதிகள் விடுவிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளுக்கு விடுதலை என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக 1967 ஆம் ஆண்டு பதவியேற்றார். பல்வேறு நல் திட்டங்களை தமிழ் நாட்டிற்கு அறிமுகம் செய்துள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் விவரங்களை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு குறித்த அறிக்கை அரசுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் நவ.27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த அறிக்கையை ஆய்வு செய்த அரசு, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை (செப் .15) முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளுக்கு விடுதலை என்று அறிவித்துள்ளது. மேலும் இவர்கள் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். இதற்கு 17 விதிமுறைகளை வகுத்து ஓர் அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், தமிழகத்தில் உள்ள 10 மத்திய சிறைசாலைகளில் இருக்கும் கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது என்றும் அறிவித்துள்ளது.
Post Office ஆயுள் காப்பீட்டு திட்டம் – தினமும் 95 ரூபாய் செலுத்தினால் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்!
இதனை செயல்படுத்த சிறைத்துறை அதிகாரியின் உதவியுடன் பல்வேறு குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த குழுக்கள் மூலம் கைதிகளை பற்றி முறையாக ஆய்வு பெற்றுக்கொண்டு விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட முயற்சித்தவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை கிடையாது என்று விதிமுறையில் வகுக்கப்பட்டிருந்தது.