நாமக்கல்லில் நவ.27ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் நவம்பர் 27ம் தேதி தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். அப்போதைய நிதி நெருக்கடியில் நிறுவனங்களால் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.
Post Office ஆயுள் காப்பீட்டு திட்டம் – தினமும் 95 ரூபாய் செலுத்தினால் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்!
இந்த நேரத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்றோர்க்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நவம்பர் 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் – 2022 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அம்மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை மேலும் மாவட்ட தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டம் சாா்பில் 27ம் தேதி சனிக்கிழமை அன்று மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. படித்த வேலைவாய்ப்பற்றோர் உரிய சான்றுகளுடன் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.