PG TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – பிப்.12 முதல் துவக்கம்!
தமிழகத்தில் TRB அண்மையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் போட்டி தேர்வுகள் வரும் 12ம் தேதி முதல் துவங்குகின்றன.
தேர்வு தொடக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் எந்த ஒரு அரசு சார்ந்த போட்டி தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன. இந்த வகையில் தமிழக அரசின் கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கை மூலம் சற்று கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கான 2,207 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வுகளை நடத்த TRB சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ‘வாவா சுரேஷ்’ – உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என பேட்டி!
இந்த அறிவிப்பு அடிப்படையில் வரும் 12ம் தேதி முதல் 20 வரை பாட வாரியாக போட்டி தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகளுக்கு இரண்டு வகையான ஹால் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்வுகளை நடத்துவதற்காக தமிழகம் முழுவதும் 160 முதல் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2.6 லட்சம் பேர் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுத உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இதனை தொடர்ந்து சமீப காலமாக அரசு தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாதிரியான முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்வு மையங்களில் 200 மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரலை காட்சி பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ள www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.