மாநிலம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 14 அன்று அனைத்து தொழில்துறை நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விடுமுறை
மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா அரசு பிப்ரவரி 14 திங்கட்கிழமையன்று பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவா அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோவா மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 14 ஆம் தேதி கட்டணத்துடன் கூடிய பொது
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் உள்ள அனைத்து தொழில்துறை ஊழியர்கள், மாநில அரசு துறை ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தினசரி கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களின் வணிக மற்றும் தொழிலாளர்கள், வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஊழியர்கள் அனைவருக்கும் அரசு வெளியிட்ட ஊதிய விடுமுறை பொருந்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நடுவர் வெங்கடேஷ் பட் எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் ஷாக்!
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 10 ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இப்போது கோவா சட்டப் பேரவையில் 40 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவுள்ள தேர்தலுக்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா வலுவான நிலையில் உள்ள வேளையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை கொடுக்க எதிர்பார்த்து வருகின்றன.