விஜய் டிவி “குக் வித் கோமாளி” நடுவர் வெங்கடேஷ் பட் எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் இனிமேல் நிகழ்ச்சி குறித்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதில் அளிக்க மாட்டேன் என விளக்கம் அளித்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி:
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சீசன்களை போல மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனிலும் நடுவர்களாக செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருக்கிறார்கள். கடந்த வார எபிசோடில் புகழ் என்ட்ரி கொடுத்த நிலையில் இந்த எபிஸோடிலும் ஷிவாங்கிக்கு பதிலாக புகழ் வர இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த எபிசோடுகள் மக்களிடம் நல்ல ரீச் கொடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்தாலும் கடந்த சீசன்கள் தான் பெஸ்ட் என மக்கள் மத்தியில் கருத்து வருகிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் கோமாளிகள் இன்னும் முயற்சி செய்து இந்த நிகழ்ச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் எபிசோடில் நடுவர்கள் கோமாளிகளை அடிப்பதாக சில சர்ச்சையான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது, நடுவர் வெங்கட் கம்பு வைத்துக் கொண்டு கோமாளிகளை அடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?
இது பற்றி அவர் கூறுகையில் இதை நிகழ்ச்சியாக மட்டும் பாருங்க மற்றபடி எதுவும் இல்லை என விளக்கம் அளித்து இருந்தார். தொடர்ந்து பல நெகட்டிவ் கமெண்ட் வந்த நிலையில் அதெற்கெல்லாம் அவர் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். இனிமேல் எந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கும் அவர் பதில் அளிக்கப் போவதில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார்.