தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு?

கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்றின் தாக்குதல் தமிழகத்தில் குறைந்து வந்த காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்குதல் கடந்த இரண்டு வருடங்களாக பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அனைத்து விதமான பொது செயல்பாடுகளும் அந்த சமயத்தில் தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர். மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் நேரடி வகுப்புகளை தடை செய்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது.

TN Job “FB  Group” Join Now

தற்போது சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று பரவல் குறைந்து இருந்ததால் தமிழகத்தில் அமலில் இருந்த இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு தான் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியுள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று கட்சிகள் கூறிவருகின்றது.

சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா, விவாகரத்து வாங்க வக்கீலை பார்க்கும் கோபி – இன்றைய எபிசோட்!

தற்போது ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் புதிதாக நியோகோவ் மற்றும் ஓமைக்ரானின் மாறுபாடான பிஏ 2 வைரஸ் தொற்றும் புதிதாக கண்டறியப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகள் காரணமாக அதிக கூட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் இருப்பதால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் அடுத்த 2 வாரங்களை மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!