PF பென்ஷன் தொகை அதிகரிப்பு? ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் லட்சக்கணக்கான பணியாளர்கள், பென்ஷன் தொகையை உயர்த்தி தருமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் விரைவில் பென்ஷன் தொகை அதிகரிப்பு செய்தி வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
PF தொகை அதிகரிப்பு:
தேசிய பென்ஷன் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும். அதன் பின்னர் இத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் வேறு எந்த தனியார் நிறுவனமாக இருந்தாலும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த வகையில் EPF சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு, பென்ஷன் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!
அந்த வகையில் பென்ஷன் தொகை , அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15000 என்றால், அதற்கான பென்ஷன் தொகை 15000 லிருந்து கணக்கிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பென்ஷன் தொகை வரம்பை உயர்த்துவதற்கு அரசு ஊழியர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கிடைத்தால் அடிப்படை சம்பளம் ரூ 15000 பெரும் ஊழியருக்கு பென்ஷன் பணம் ரூ.8571 ஆக உயர்ந்துவிடும்.
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!
இந்த வகையில் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ 50,000 இருந்தாலும் அதற்கான பென்ஷன் தொகை ரூ.15,000லிருந்து கணக்கிடப்படுவதால் ஊழியர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துவதாக அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை சம்பள வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்ஷன் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.