IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!

0
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!

2022 ஆண்டின் ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக தொகைக்கு சிறந்த 4 வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.

IPL மெகா ஏலம்:

2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 15 IPL தொடருக்காக மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா – பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

2021 ஆண்டு BCCI ஒரு அணி தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி 5 முறை IPL கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸும் நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது. ரோஹித் சர்மா 16 கோடிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோர் முறையே 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடிக்கு தங்கவைக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 48 கோடி ரூபாய்க்கு மீதம் உள்ளது. இதனை தொடர்ந்து வரும் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான 4 வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.

தமிழகத்தில் பிப்.16 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு மும்பை அணியால் விடுவிக்கப்பட்ட விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் , நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் போல்ட் , மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் ஆகியோரை மீண்டும் அணியில் எடுக்க மும்பை அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் மெகா ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த 4 வீரர்களும் மெகா ஏலத்தின் அடிப்படை விலையான 2 கோடிக்கு தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இம்முறை இந்த நான்கு வீரர்களையும் மும்பை அணி அதிக தொகைக்கும் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!