திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் உலக புகழ் பெற்ற திருத்தலமாகும். இங்கு அம்மாநில மக்களை தாண்டி வெளி மாநில மக்களும், வெளி நாட்டவர்களும் வருகை புரிவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை தகவல்!
இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் தரிசன டிக்கெட் வழங்கபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு ஆர்ஜித சேவைகள் நடைபெற உள்ளது. அதிகாலை சுப்ரபாதம், அஷ்டதள பாத பத்மாராதனை, தோமாலை அர்ச்சனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, மேல் சாற்று வஸ்திரம் போன்ற பூஜைகள் தினந்தோறும் நடைபெற உள்ளது.
அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!
மேற்கண்ட பூஜைகளுக்கு பக்தர்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படவுள்ளனர். மெய்நிகர் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் அந்த சேவைகளில் நேரடியாக பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி தரிசனம் மற்றும் பிரசாதம் மட்டும் வழங்கப்படும். அதன் பிறகு ஏப்ரல் 1 முதல் முன்பதிவு செய்த உதய அஸ்தமனம் சேவை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அரசின் கொரோனா விதிமுறைகளின் படி அந்தந்த சேவைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.