மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? PFRDA தடை!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? PFRDA தடை!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? PFRDA தடை!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? PFRDA தடை!

ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதற்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த நிதியாண்டிலிருந்து மீட்டெடுக்கும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், PFRDA தடை அரசுக்கு இப்போது பெரிய பாதிப்பாக உருவாகியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மற்றும் ஊழியர்களின் பங்களிப்புகள் மூலம் திரட்டப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும் என்ற காங்கிரஸ் அரசின் கோரிக்கையை தற்போது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிராகரித்துள்ளது. அதாவது மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட் உரையில் ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் ராஜஸ்தான் மாநில அரசு 2004 முதல் பங்களிப்பாக திரட்டப்பட்ட நிதியை திரும்பப் பெறுவதாகவும், பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் அதை மாற்றுவதாகவும் அறிவித்தது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பண மோசடியில் இருந்து தப்பிக்க வழி!

இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது நிதியைப் பெற முடியும். இதற்கிடையில் ஏப்ரல் 1, 2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இந்த முடிவு மாநிலத்தில் உள்ள 300,000 முதல் 350,000 அரசாங்க ஊழியர்களை பாதித்தது. இதற்கிடையில் இது குறித்த விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 21 அன்று, ராஜஸ்தான் அரசாங்கம் PFRDAக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில் ‘பழைய ஓய்வூதியத் திட்டம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களின் சம்பளத்தில் பங்களிப்பைக் குறைக்கவில்லை.

Exams Daily Mobile App Download

எனவே, ஏற்கனவே அரசு பங்களிப்பு மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு ஆகிய இரண்டிலும் திரட்டப்பட்ட நிதி, வருவாய் ரசீது என மாநில அரசிடம் மீண்டும் டெபாசிட் செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது ராஜஸ்தான் மாநில அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்து PFRDAவின் உதவி பொது மேலாளர் ப்ரோதீப்டோ சாட்டர்ஜிவிடம் இருந்து மே 2ம் தேதி பதில் கடிதம் வந்தது. அதில், ‘ஏற்கனவே அரசு பங்களிப்பு மற்றும் NPSக்கான ஊழியர்களின் பங்களிப்பு ஆகிய இரண்டிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிதிகள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் டெபாசிட் செய்யப்படலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!