ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பண மோசடியில் இருந்து தப்பிக்க வழி!
தனிமனித அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டை வைத்து தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்ய வாய்ப்பு உள்ளதாக UIDAI அறிவித்துள்ளது. அதனால் தற்போது உள்ள மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பண மோசடி
ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஆதார் கார்டு ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஆதார் கார்டை வைத்து வங்கி கணக்கை தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்தை பெறவும் மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, கோவிலுக்கு செல்ல மற்றும் மொபைல் வாங்க, சிம் கார்டு பெற போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர் ,பாலினம், வயது ,புகைப்படம்,முகவரி, தொலைபேசி எண், என அனைத்தையும் நம்மால் ஆதார் அட்டையில் மாற்றிக்கொள்ள முடியும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதை செய்யாவிட்டால் நடவடிக்கை!
மேலும், ஆதார் கார்டுகளில் உள்ள மாற்றங்களை சரி செய்ய ஆதார் மையத்தில் அல்லது போஸ்ட் ஆபீஸ்க்கு செல்வோம். ஆனால் இப்போது வீட்டில் இருந்து மொபைல் மூலம் செய்வதற்கான வசதிகளை உருவாகியுள்ளது. அதன்படி, இந்த ஆதார் கார்டை வைத்து நிறையப் பேர் மோசடி செய்கின்றனர். நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை திருடி மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஆதார் கார்டை வேறு ஏதாவது காரணத்துக்காகவும் பல்வேறு இடங்களில் தவற விடுவோம். இது நமக்கே ஆபத்தாக முடியலாம்.
Exams Daily Mobile App Download
ஆதார் கார்டு என்பது மிகப் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணமாகும். அதை மற்றவரிடம் கொடுக்கும்போது அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும், ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதி மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருட வாய்ப்பு உள்ளதாகவும் UIDAI வலியுறுத்தியுள்ளது. அதனால் உங்களுடைய ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற சூழலில் நீங்கள் உங்களுடைய புதிய மொபைல் நம்பரை அப்டேட் செய்திருக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது.