தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் முதலிடம்!

0
தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் முதலிடம்!
தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் முதலிடம்!
தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் முதலிடம்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதையடுத்து அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வின் முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு முடிவுகளை காண விரும்பும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொடுத்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93% பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அத்துடன் வருகிற 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நாளை (ஜூன் 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் பெரம்பலூர் மாவட்டம் 97.95% தேர்ச்சி விகிதம் பெற்று தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளது என்றார். இதே போல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் 10ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவன் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் குமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!