புதுக்கோட்டையில் நாளை (ஜூன் 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 21) புதுக்கோட்டை கறம்பக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கிருக்கும் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை :
சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.
TN Job “FB Group” Join Now
அவ்விதமாக நாளை செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. அதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும், கறம்பக்குடி நகர், அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, வாண்டான்விடுதி, பந்துவாக்கோட்டை ஆகிய கறம்பக்குடி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும்,
அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்? பாதுகாப்புத்துறை முக்கிய விளக்கம்!
ரெகுநாதபுரம், கட்டாம்பட்டி, முதலிப்பட்டி, கீழாத்தூர், கிளாங்காடு, பல்லவராயன்பத்தை, குழந்திரான்பட்டு, திருவோணம், நெய்வேலி, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, குரும்பிவயல் என மேற்குறிப்பிட்ட மின் நிலையங்களில் இருந்து விநியோகம் பெற கூடிய நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது என கறம்பக்குடி மாவட்ட உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.