சென்னை ‘மெரினா’ கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை – காவல்துறை அதிரடி!
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவும் விகிதம் கணிசமாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
எனவே தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக திங்கட்கிழமை மெரினாவில் ஒன்று கூடுவோம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கூறி வந்தனர். எனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வதந்திகளை பரப்புவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட இதர சட்டப்பிரிவுகள் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளதால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.