TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து நடப்பாண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு:
தமிழக அரசு குரூப் 1 , குரூப் 2 , குரூப் 3 மற்றும் குரூப் 4 பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வானது 2019ம் ஆண்டு நடத்தப்பட்டது.
Best TNPSC Coaching Center – Join Now
நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர் ஆகிய பணிகளுக்கு கலந்தாய்வானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 17ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் மொத்தமுள்ள 6007 காலிப்பணியிடங்களில் 5,798 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 209 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 403 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – EPFO வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் 3ம் கட்ட கலந்தாய்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், நில அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கு வரும் 25ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது. எனவே கலந்தாய்வு முடிந்த பின்னர் நடப்பாண்டிற்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.