தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரி & மார்ச் மாதத்தில் திருப்புதல் தேர்வு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜனவரி & மார்ச் மாதத்தில் திருப்புதல் தேர்வு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜனவரி & மார்ச் மாதத்தில் திருப்புதல் தேர்வு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரி & மார்ச் மாதத்தில் திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

திருப்புதல் தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த செப்.1 ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

அதனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களது கற்றல் திறனை அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திருப்புதல் தேர்வானது ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அதன்படி வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மாத காலங்களிலே மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் விதமாக பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் வீடு தேடிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளின் அடிப்படையில் பாடப்பகுதியை விரைந்து முடிக்க முடிவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாடங்களை முடித்து ரிவைஸ் செய்த பிறகு மே மாதத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இனி கூட்டு வங்கி கணக்கு கட்டாயமில்லை!

அவ்வாறு பொதுத்தேர்வு நடத்தும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது தேர்வு ரத்து செய்யப்படும் நிலை நேர்ந்தால் அப்போது இந்த திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் இந்த இரண்டு திருப்புதல் தேர்வுகளையும் அலட்சியப்படுத்தாமல் கவனமாக எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பாடங்களும் நடடத்தப்பட்டு விடும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!