ஓய்வூதியதாரர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இந்த கடைசி தேதிக்குள் இதை பண்ணிடுங்க!
சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆயுட்கால சான்றிதழை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
ஆயுட்கால சான்றிதழ்:
இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு காலத்திற்குப் பிறகு மாதந்தோறும் சரியான முறையில் ஓய்வூதியம் பெற தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். ஆண்டுதோறும் கொடுக்கப்பட்ட காலகெடுக்குள் ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது தான் அரசிடம் இருந்து ஓய்வூதியத்தொகை சரியான முறையில் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆயுட்கால சான்றிதழை ஜன.1ம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அத்துறை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா தொற்றால் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள் – என்னென்ன கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!
Exams Daily Mobile App Download
ஓய்வூதியதாரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் நேரடியாக சென்று தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அலுவலகம் செல்லும் போது ஓய்வூதிய ஆணை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.