புதிய வகை கொரோனா தொற்றால் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள் – என்னென்ன கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!
சீனாவில் BF.7 புதிய வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளதால் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் என்னென்ன என்று இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
தற்போது சீனாவில் BF7 புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்திய நாட்டில் சுகாதாரத்துறை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
Follow our Instagram for more Latest Updates
மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி, விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நாளை (டிச.24) முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலைய உள் வளாகத்திற்குள் வரும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லையெனில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட நடைமுறைகள் மீண்டும் அமலாகிறது.
தமிழகத்தில் பொங்கல் பரிசுக்காக ரூ.2,357 கோடி தொகை ஒதுக்கீடு – மக்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!
Exams Daily Mobile App Download
அதன்படி திருச்சி, மதுரை, தூத்துக்குடி,கோவை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள்ளை பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தால் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களின் முகவரிக்குட்பட்ட மாவட்டத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.