தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் வசதி.. ஓய்வு பெறாமலேயே பணத்தை பெறலாம்.. CBT பரிந்துரை!
இந்தியாவில் ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு முன்கூட்டியே அதாவது ஊழியர்கள் ஓய்வு பெறும் காலத்திற்கு முன்பாகவே ஓய்வூதியம் பெறும் சலுகையை அளித்துள்ளது. இத்தகைய திட்டத்தை மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது.
ஓய்வூதியம்:
இந்தியாவில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு (PF) உள்ளது. இந்த கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை தேவையின் போது ஊழியர்கள் விண்ணப்பித்து பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த EPFO திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கப்படுவர். தற்போது தனியார் நிறுவனங்களின் பணி புரிவோர்களுக்கு இந்த திட்டம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இனி ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தின் 6 மாதங்களுக்கு முன்னதாகவே EPS கணக்கில் இருந்து உங்களின் ஓய்வூதியத்தை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய 40 கோடி நபர்களின் ட்விட்டர் தகவல்கள் திருட்டு – அதிர்ச்சி அறிக்கை வெளியீடு!!
Exams Daily Mobile App Download
இந்த புதிய நடவடிக்கையை மத்திய அறங்காவலர் குழு (CBT) பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பலன்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்துள்ளது. EPS கணக்குதாரர்கள் ஓய்வூதிய தொகையை திரும்ப பெற UAN எண் மற்றும் KYC விவரங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.