ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!
தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
ஊக்கத்தொகை
தமிழகத்தில் ரேஷன் கடை வாயிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனது. இப்பணியை ரேஷன் கடை ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இப்பணியை மட்டுமல்லாது ரேஷன் கடை விற்பனையாளர்கள் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதில் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து வங்கி கணக்கு பெறுவது, வங்கி கணக்கு வைத்திருக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் வசதி.. ஓய்வு பெறாமலேயே பணத்தை பெறலாம்.. CBT பரிந்துரை!
Exams Daily Mobile App Download
இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்த பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி வழங்கும் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 50 காசுகள் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.