அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசு அறிவிப்பு!
அரசு துறையில் மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் EPFO வாயிலாக ஓய்வு பெற்ற பின் பென்ஷன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படும் அரசு ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மாநில அரசு அறிவிப்பு:
ஓய்வூதியர்கள் மாதந்தோறும் வாங்கும் பென்ஷன் பணத்தை வங்கிகள், அஞ்சல் துறை மூலமாகவும் பெற்று வருகிறார்கள். இந்த பென்ஷன் பணம் வாங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வங்கி மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும் உயிர்வாழ் சான்றிதழ் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் பணம் வழங்கப்படும். தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மூத்த குடி ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் ரூ.2 லட்சம் வரை DA தொகை? முழு விவரம் இதோ!
இதனை கருத்தில் கொண்டு இந்தியாவின் தலைநகரமான டெல்லி மாநிலத்தில் மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படும் அரசு ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது டெல்லியில் பென்ஷன் பணம் வாங்கும் ஓய்வூதியர்கள் இனி ஆன்லைனிலேயே பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் வெளியிட்டார். மேலும் இனி பென்சன் பணத்தை பெறுவதற்கும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் உயிர்வாழ் சான்றிதழை பெறுவதற்கும் ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பிப்.21 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
இந்த அறிவிப்பால் டெல்லி மாநில ஓய்வூதியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.