மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் ரூ.2 லட்சம் வரை DA தொகை? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஒரே தவணையில் ரூ.2 லட்சம் வரை DA தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஒரே தவணையில் ரூ.2 லட்சம் வரை DA தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் ரூ.2 லட்சம் வரை DA தொகை? முழு விவரம் இதோ!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 18 மாத கால நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.2 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

DA தொகை

சமீப காலமாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை குறித்து மோடி அரசிடமிருந்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. இது தொடர்பான ஊடக செய்திகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாத கால நிலுவைத் தொகையை அரசு ஒரே நேரத்தில் வழங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

இன்று முதல் பிப்.21 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

இருப்பினும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், DA நிலுவைத் தொகையை வழங்க பரிசீலித்து, விரைவில் தீர்வு காணப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். அதே போல JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், அரசாங்கத்திடம் DA குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் JCM இன் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக அகவிலைப்படி (DA) தொகை ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படும். அந்த வகையில் 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிப்ரவரி 18 வரை 8 நகரங்களில் 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!

கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியது. இப்போது ஜனவரி 2022 தவணைக்கான DA தொகை 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மொத்த DA 34 சதவீதமாக உயரும். அந்த வகையில் வரும் கூட்டத்தில் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க அரசு முடிவு செய்தால், லெவல்-1 ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை DA கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல, லெவல்-13ல் உள்ள பணியாளர்கள் ஒரே நேரத்தில் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை பெறலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!