IPL 2022: மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!
2022 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொடரில் இந்த முறை 10 அணிகள் பங்கேற்று போட்டியிடுகின்றன. IPL மெகா ஏலம் இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் கேப்டனை தேர்வு செய்யாத அணிகள் சிறந்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் வகையில் ஏலத்தில் கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.
IPL மெகா ஏலம்:
15 வது சீசன் IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் இதற்கு முன் அவ்வணிக்கு கேப்டன் செய்த வீரர்களை தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் சிறந்த வீரரை எடுத்து கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியை முடித்துவிட்டு கேப்டனையும் தேர்வு செய்துள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசு அறிவிப்பு!
குஜராத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இந்த 2 அணிகளை தவிர்த்து மீதம் உள்ள 8 அணிகளில் 5 அணிகள் கேப்டனை தக்கவைத்து கொண்டது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த IPL சீசன் முடிவடைந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை ஒன்பது ஆண்டுகளாக வழிநடத்திய விராட் கோஹ்லி கேப்டன் பதிவிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோஹ்லி விலகியது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் பிப்.21 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
மேலும் கடந்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம் என்று CSK அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் பணியில் தோனி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்கும் டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இயோன் மோர்கன் , மேக்ஸ்வெல் போன்ற சிறந்த கேப்டன்களை, கேப்டன் தேர்வு செய்யாத அணிகள் இந்த 3 வீரர்களை ஏலத்தில் எடுக்க கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு IPL மெகா ஏலம் நாளை பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது.