மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் – ஜாக்பாட் அறிவிப்பு!

முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம் தேசிய பென்சன் திட்டம் ஆகும். 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக தேசிய பென்சன் திட்டம் வளர்ந்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவை வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னாளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம். அரசு ஊழியரின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் தேசிய பென்ஷன் திட்டத்தில் பங்களிக்கின்றனர். மேலும் அரசு வழங்கும் பங்கில் ஊழியர் பங்களிப்பும் சேர்க்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பிலிருந்து 1500 கோடியும் பங்களிக்கப்படுகிறது. இந்த வகையில் கடந்த 17 ஆண்டுகளில் இந்தத் தொகை 30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உண்டு. இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு, அரசு ஊழியர்களுக்கும் விரைவில் தேசிய பென்ஷன் திட்ட நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும், 2005ஆம் ஆண்டுக்கு பிறகு சேவையிலிருந்து அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்தில் பலனை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகம், 4 முதல் 5 நாட்களில் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கழிவைச் சேர்க்க, ஊழியர்கள் முதலில் எந்த மாதத்தில் தங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை என்பதை சரிபார்க்க வேண்டும். பின்பு அரசு அலுவலரால் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவர் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 4, 5 நாட்களில் தேசிய பென்ஷன் திட்ட நிலுவைத் தொகை ஊழியரின் கணக்கில் வந்துவிடும். இதன் மூலம் சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!