தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்ட உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வை மீண்டும் வழங்க கோரி ஆசிரியர்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊக்கத்தொகை உயர்வு:
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு முதல்வர் அண்ணாவின் ஆட்சிக்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நடைமுறை கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு வழங்குவதற்கு பதிலாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!
அரசின் இத்தகைய அறிவிப்பால் உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு வாங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே இருந்தது. ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு வழங்காத காரணத்தினால் எக்கச்சக்கமான ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் கீழ்மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.நாகைமாளியை சந்தித்து மீண்டும் உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்கத்தொகை மறுக்கப்பட்டால் ஆசிரியர்களுக்கான உயர்கல்வி ஆர்வம் குறையும் எனவும், இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் எனவும், அவர்களின் கல்வித்திறன் பாதிப்படையும் எனவும் கூறியுள்ளனர். இதனால் விரைவில் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.