மாநில அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA அறிவிப்பை தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு அளிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
சம்பள உயர்வு
சமீப காலமாக மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து சில மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி (DA), சம்பள உயர்வு உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஹிமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு தொடர்பான சில நல்ல செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் அறிவிப்பில், ‘மாநில அரசுத்துறையில் இரண்டு வருடங்களை நிறைவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் பலன்கள் கிடைக்கும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!
அந்த வகையில் ஜனவரி 3, 2022க்கு முன் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படாமல் பிறருக்கு இணையான சம்பளம் கிடைக்கும். இதனுடன் அரசு ஊழியர்களின் ஊதியம் 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில், ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, சுமார் 1.50 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இப்போது ஓய்வூதியத்தில் 15 முதல் 20 சதவிகிதம் உயர்வு கிடைக்கும்.
என்றாலும் 2016 ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற 40,000 ஊழியர்கள் விரைவில் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 2016 க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இப்போது ஓய்வூதியத்தில் 15 முதல் 20 சதவீதம் உயர்வு கிடைக்கும். இது குறித்து முதல்வர் தாக்கூர் கூறுகையில், ‘மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இடைக்கால நிவாரணத் தொகையான ரூ.6,500 கோடியில், ரூ.3,500 கோடி தனது ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.